அமைச்சர் செந்தில்பாலாஜி கைது..!

published 1 year ago

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது..!

சென்னை: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. அவருடைய சென்னை, கரூர் வீட்டில் சோதனை நடந்தது.

இந்த 17 மணி நேர சோதனை நிறைவடைந்த நிலையில் நள்ளிரவு செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்தார். உடனே அவரை அமலாக்கத் துறையினர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் அங்கு ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த திமுகவினர் செந்தில் பாலாஜியின் கைதை கண்டித்தனர்.

மேலும் அமைச்சர்களும் அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றனர். இந்த நிலையில் ஐசியூவில் உள்ள செந்தில் பாலாஜி குறித்து எம்பி என்.ஆர்.இளங்கோ கூறுகையில் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத் துறை யாரையும் அனுமதிக்கவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜியை வீட்டுக்குள் வைத்து விசாரணை நடத்தினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாரா என தெரியவில்லை. அமலாக்கத் துறையினரின் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி உளளார்.

அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இருபப்தால் முன்ஜாமீன் தாக்கல் செய்ய இயலாது. எந்த வழக்குகாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றார்கள் என தெரியவில்லை என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe