சவுரிபாளையத்தில் பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 29 பவுன் நகை கொள்ளை

published 1 year ago

சவுரிபாளையத்தில் பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 29 பவுன் நகை கொள்ளை

கோவை: கோவை சவுரிபாளையத்தில் பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 29 பவுன் நகை, பணம் கொள்ளைபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (41). தனியார் நிறுவன ஊழியர். தமிழ்செல்வன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், மதியம் பக்கத்து தெருவில் வசிக்கும் தமிழ்செல்வனின் தாய் ராஜாமணி தனது மகன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அவர் உடனே இதுகுறித்து தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 29 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 25 ஆயிரத்தை காணவில்லை. மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக தமிழ்செல்வன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். மேலும், வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபரின் கைரேகையை பதிவு செய்தனர்.

இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe