1-5ம் வகுப்பு திறப்பு - கோவையில் குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு

published 1 year ago

1-5ம் வகுப்பு திறப்பு - கோவையில் குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் வகுப்புகள் துவங்கப்படுகிறது.  

அதன்படி கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு உற்சாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளில் சில குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவதற்கு அடம் பிடிப்பர்.



இந்நிலையில் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக சில பள்ளிகளில் மிக்கிமவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடம் அணிந்தும் உற்சாக இமோஜி வரைபடங்களை கொண்டும் இனிப்புகள் வழங்கி குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். 

இதனால் குழந்தைகளும் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர். மேலும் முதல் நாள் என்பதால் பெற்றோர்களும் பள்ளிகளுக்கு வருகை புரிகின்றனர். ஆசியரியர்களும் குழந்தைகளை இன்முகத்துடன் வரவேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe