கோவையில் முதியவர் மொப்பட்டில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் பணம் திருட்டு

published 1 year ago

கோவையில் முதியவர் மொப்பட்டில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் பணம் திருட்டு

கோவை: கோவை ஒண்டிப்புதூர் கிருஷ்ணன் நாயுடு வீதியை சேர்ந்தவர்  தேவராஜ் (63). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது மொப்பட்டில் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார்.

பின்னர் வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்தார். வங்கியில் இருந்து வெளியே வந்த அவர் பணத்தை மொப்பட்டில் உள்ள சீட்டுக்கு அடிப்பகுதியில் வைத்தார். இதனைத் தொடர்ந்து தேவராஜ் மொப்பட்டில் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார்.

மோட்டார் சைக்கிளை வங்கி முன்பு நிறுத்திவிட்டு வங்கியினுள் சென்றார். இதனை  நோட்டமிட்ட யாரோ மர்ம நபர் மொப்பட்டில் சீட்டுக்கு அடிப்பகுதியில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றனர்.

வங்கியில் இருந்து திரும்பி வந்த தேவராஜ் பணம் திருடு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe