பீளமேடு அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 லட்சம் பணம் திருட்டு

published 1 year ago

பீளமேடு அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 லட்சம் பணம் திருட்டு

கோவை: கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அவரது நண்பரான கண்ணன் என்பவருக்கு கொடுப்பதற்காக காரில் புறப்பட்டார். 

இரவு 9.30 மணியளவில் ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் யாரோ ஈஸ்வர மூர்த்தியின் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த ரூ.70 லட்சம் பணத்தைத் திருடி தப்பிச் சென்றனர்.

சாப்பிட்டு விட்டு திரும்பி வந்த ஈஸ்வர மூர்த்தி கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். காரி உள்ளே சென்று பார்த்த போது ரூ.70 லட்சம் பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஈஸ்வர மூர்த்தி பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர் பணத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த ரூ.70 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம  நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe