காரமடை அருகே ராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

published 2 years ago

காரமடை அருகே ராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

கோவை, ஜூன்.3-
நீலகிரியை சேர்ந்தவர் சகாயநாதன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள டீச்சர்ஸ் காலணி பாலாஜி நகர் பகுதியில் குடியேறினார்.
உறவினர் வீட்டிற்கு சம்பவத்தன்று சகாயநாதன் தனது குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று இரவு சகாயநாதன் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின்  முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 14 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
தடயங்களை இதுகுறித்து சகாயநாதன் காரமடை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்த  தடயங்களை சேகரித்தனர்.
மேலும் அந்த பகுதியில்  பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரானுவ வீரரின் வீட்டை உடைத்து  கொள்ளை அடித்த  மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe