கோவையில் காரை சாலையோரம் நிறுத்தி ஓய்வெடுத்த போது திருட்டு!..

published 1 year ago

கோவையில் காரை சாலையோரம் நிறுத்தி ஓய்வெடுத்த போது திருட்டு!..

கோவை: கோவையில் ஐடி பெண் ஊழியர் உட்பட 3 பேரிடம் செல்போன் பறித்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை சேரன்மாநகரை விகே ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தசதீஷ்(42). கால் டாக்சி டிரைவர்.

 இவர் நேற்று ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு பால்கம்பெனி அருகே காரை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென ஆனந்தசதீஷ் காரில் வைத்திருந்த 2 செல்போன்களை திருடி தப்பி செல்ல முயன்றார். 

சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ஆனந்தசதீஷ் செல்போன் திருடிய நபரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தார். 

விசாரணையில் அவர் சுந்தராபுரம் ரோடு குமாரசாமி காலனியை சேர்ந்த குணா(எ) ஓட்டப்பல் குணா(32) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இவர் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe