கோவையில் மது, புகையிலை விற்ற 16 பேர் கைது

published 1 year ago

கோவையில் மது, புகையிலை விற்ற 16 பேர் கைது

கோவை: கோவையில் மது, புகையிலை விற்ற 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் புகையிலை விற்பனையை ஒழிக்க கடைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதேபோல், நேற்று நகரில் கடைவீதி, வெரைட்டிஹால் ரோடு, ரேஸ்கோர்ஸ், சரவணம்பட்டி, சாயிபாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். 

அப்போது ஹான்ஸ், கூல் லிப், போன்ற புகையிலைப்பொருட்களை பதுக்கி விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான புகையிலைப்பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கோவை சிங்காநல்லூர், போத்தனூரில் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். 

அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ்(36), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சரவணன்(26), உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

 அவர்களிடம் இருந்து 122 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe