சர்வதேச யோகா தினம் : கோவையில் போலீசார் மாணவர்கள் யோகா பயிற்சி

published 1 year ago

சர்வதேச யோகா தினம் : கோவையில் போலீசார் மாணவர்கள் யோகா பயிற்சி

கோவை : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் போலீசார், செவிலியர்கள், மாணவர்களுக்கு இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி மனதையும், உடலையும் பேணிக்காக்கும் விதமாக கோவையில் முன்னாள் காவல் அதிகாரிகள் சங்கம் மற்றும் உலக சமுதாய சேவா சங்கம் இணைந்து காவலர்களுக்கு யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

 போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் கோவை மாநகரில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. 

இந்த யோகா பயிற்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் யோகா செய்தனர்.

இதேபோல், கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் டீன் நிர்மலா, செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe