கோவையில் தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் காந்தி.

published 1 year ago

கோவையில் தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் காந்தி.

கோவை : தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அதன் ஒரு நிகழ்வாகக் குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அங்குள்ள கருவிகளைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

 மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்களின் தரங்களையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் துறையின் முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துறையின் ஆணையர் வள்ளலார் மாநகராட்சி துணை ஆணையர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து தனியார் நட்சத்திர ஹோட்டலில் துணி நூல் துறையின் சார்பில் தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe