கழிவுநீர் ஊர்திகளின் மீது சேவை குறை இருக்கா..? உடனே சொல்லுங்க.. கோவை மாநகராட்சி அறிவிப்பு..

published 1 year ago

கழிவுநீர் ஊர்திகளின் மீது சேவை குறை இருக்கா..? உடனே சொல்லுங்க.. கோவை மாநகராட்சி அறிவிப்பு..

கோவை: கழிவுநீர் ஊர்திகளின் மீது சேவை குறைபாடுகள் இருப்பின் எப்போது வேண்டுமானாலும் இலவச தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என  கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாநகராட்சியின் கழிவுநீர் ஊர்திகள் மற்றும் தனியார் கழிவுநீர் ஊர்திகள் பொதுமக்களின் வீடுகளில் உள்ள செப்டிக் கழிவுகளை முறையாக மற்றும் பாதுகாப்பாக அகற்றுவதை கண்காணிக்க ஏதுவாக  மாநகராட்சியில் பொதுமக்களின் தொடர்புக்கு 14420 என்ற இலவச தொலைபேசி எண் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

பொதுமக்கள் கழிவுநீர் அகற்றுவது சம்மந்தமாக குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் 14420 என்ற இலவச தொலைபேசி சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இந்த இலவச தொலைபேசி எண்ணில் கழிவுநீர் ஊர்திகளின் மீது சேவை குறைபாடுகள் இருப்பின் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe