ஆதரவற்ற தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது..!

published 1 year ago

ஆதரவற்ற தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது..!

கோவை : கோவை மாநகராட்சியில் அண்மை காலங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு பொதுமக்கள் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் ஆதரவற்ற தெரு நாய்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் கருத்தடை அறுவை மற்றும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கோவையில் துவங்கியுள்ளது. 

அதன் படி இன்று கோவை மத்திய மண்டலம் 66 வது வார்டுக்கு உட்பட்ட புளியகுளம், ஹவுசிங் போர்டு, அலமேலுமங்கம்மாள் லே-அவுட், ரெட்பீல்டு சாலை ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக கோவை மாநகராட்சி சார்பில் பிரத்தியேக வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டு, தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe