முதலாளி மனைவியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர்

published 1 year ago

முதலாளி மனைவியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர்

கோவை:

கோவையில் வேலையை விட்டு நிறுத்திய ஆத்திரத்தில் முதலாளி மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக ரூ. 2.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு திருமால் தெருவை சேர்ந்தவர் 40 வயது நபர். இவர் அதேபகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 5 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவரது உறவினர் கணேஷ்குமார்(41) என்பவரும் வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில், கணேஷ்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் உரிமையாளர் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்குமார் முதலாளியின் மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி ரூ. 2.50 லட்சம் கேட்டு மிரட்டினார். 

மேலும் கொடுக்க மறுத்தால் தன்னிடம் உள்ள உனது மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கடை முதலாளி இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் கணேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe