காலி மதுபாட்டில்களுக்கு கிடைக்கின்ற விலை கூட தேங்காய்க்கு கிடைப்பத்தில்லை- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு..!

published 1 year ago

காலி மதுபாட்டில்களுக்கு கிடைக்கின்ற விலை கூட தேங்காய்க்கு கிடைப்பத்தில்லை- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு..!

கோவை

 

காலி மது பாட்டில்களுக்கு கிடைக்கின்ற விலை கூட தேங்காய்களுக்கு கிடைப்பதில்லை எனவும் தென்னை விவசாயம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தென்னை சார்ந்த தொழில்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அரசாங்கமே தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னையை பாதிக்கும் நோயை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நோயால் பாதிக்கப்பட்டு பட்டுப்போன தென்னை மரங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், தென்னை நல வாரியம் அமைத்திட வேண்டும், பொள்ளாச்சியை மையமாக வைத்து தேங்காய் கொள்முதல் மையம் அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

கோரிக்கை மனுவை அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காலி மது பாட்டில்களுக்கு கிடைக்கின்ற விலை கூட தேங்காய்க்கு கிடைப்பதில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் தேங்காய், இளநீர், காலி மதுபாட்டில்கள் ஆகியவற்றை எடுத்து வந்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe