சிட்கோ எல்ஐசி காலனியில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

published 1 year ago

சிட்கோ எல்ஐசி காலனியில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

கோவை:

கோவை சிட்கோ எல்ஐசி காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீ சுப்பிரமணியம்(50). ஐடி கம்பெனி ஊழியர். இவரது வீட்டு பின்புறம் சந்தனமரம் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நைசாக அங்கு வந்த மர்ம நபர் சுமார் 10 அடி உயரமுள்ள சந்தனமரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளார். 

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது சந்தன மரம் கடத்தப்பட்டிருப்பதை கண்டு ஸ்ரீ சுப்பிரமணியம் அதிர்ச்சியடைந்தார். அவர் உடனே இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கடத்திய நபரை தேடி வருகின்றனர். 

கோவையில் சில தினங்களாக சந்தன மரம் வெட்டி கடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe