கஞ்சா விற்ற வாலிபர் கைது

published 1 year ago

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோவை: கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் உள்ள காலி இடத்தில் சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று சரவணம்பட்டி போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரத்குமார்(28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe