உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை :1800 கிலோ வாங்கி சென்ற மக்கள்

published 1 year ago

உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை :1800 கிலோ வாங்கி சென்ற மக்கள்

கோவை:  கோவை மாவட்டத்தில் வெளிச்சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதனை அடுத்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தக்காளி வரத்தினை அதிகரித்து, உழவர் சந்தைகளின் மூலம் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தக்காளி தடையின்றி கிடைக்க தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் ஆகியோரால் ஆலோசனை நடத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய 6 உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது: 

விவசாயிகளிடம் தக்காளி நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு உழவர் சந்தைகளில் சுமார் 1,800 கிலோ தக்காளியை கிலோ ஒன்றுக்கு ரூ.80 என்ற அளவில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டது. 

இனிவரும் காலங்களில் தக்காளி வரத்தினை அதிகரித்து விலை உயர்வை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தக்காளியை கொள்முதல் செய்து சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe