AI வருகை !! 90% ஊழியர்கள் பணிநீக்கமா?? பெங்களூர் நிறுவனத்தின் அதிர்ச்சி செயல்!!

published 1 year ago

AI வருகை !! 90% ஊழியர்கள் பணிநீக்கமா?? பெங்களூர் நிறுவனத்தின் அதிர்ச்சி செயல்!!

இந்தியா: உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு பின்னால் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் பல இளைஞர்கள் தங்களுடைய கனவு நிறுவனத்தை AI துறையில் உருவாக்கி வரும் வேளையில், ஸ்டார்ட்அப் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செலவுகளைக் குறைக்கும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே செயற்கை நுண்ணறிவு துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது

இந்த நிலையில் பெங்களூர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் பல இடங்களில் ஈகாமர்ஸ் வர்த்தகம் செய்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Dukaan, தனது வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருக்கும் 90 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Dukaan நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருக்கும் ஊழியர்களின் பணியை ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் AI Chatbot சிறப்பாகவும், வேகமாகவும் இயங்கும் என்பதை நிறுவி அதில் வெற்றிகண்ட காரணத்தால் தற்போது இப்பிரிவில் இருக்கும் 90 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

ukaan நிறுவனத்தின் முக்கிய இலக்கான லாபகரமாக இயங்க வேண்டும் என்பதை எட்ட AI Chatbot நிறுவி 90 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளோம் என இந்நிறுவன நிறுவனர் சிஇஓ சுமித் ஷா தெரிவித்துள்ளார்.

AI Chatbot நிறுவியதன் மூலம் Dukaan நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் செலவுகளை சுமார் 85 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது, இதோடு தீர்வு காணும் நேரம் 2 மணிநேரத்தில் இருந்து 3 நிமிடமாகக் குறைந்துள்ளது என Dukaan நிறுவன நிறுவனர் சிஇஓ சுமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது கடுமையான முடிவாக இருந்தாலும், முக்கிய தேவையாக உள்ளது. AI Chatbot நிறுவியதன் மூலம் 90 சதவீத ஊழியர்கள் சப்போர்ட் அணியிலிருந்து பணிநீக்கப்பட்டு உள்ளனர்.

இது கடுமையான முடிவாக இருந்தாலும், முக்கிய தேவையாக உள்ளது என சுமித் ஷா டிவீட் செய்த நிலையில் இதற்கு பலரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போதைய பொருளாதாரத்திலும், வர்த்தக சூழ்நிலையிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் யூனிகார்ன்  என்னும் முக்கிய நிலையை அடைய லாபத்தை நோக்கி பயணித்துக்கொண்டு உள்ளனர். இதே நிலையில் தான் நாங்களும் உள்ளம் என சுமித் ஷா விளக்கம் கொடுத்தார். 

இந்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறைக்கான மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமீபத்தில் AI மூலம் வேலைவாய்ப்புகள் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ளது என்பது முட்டாள்தனமானது என தெரிவித்தார். இதன் பின்பு Dukaan நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் 90% பணிநீக்கம் வந்துள்ளது.



 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe