தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி -விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்!!!!!

published 1 year ago

தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம்  செய்ய வலியுறுத்தி -விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்!!!!!

கோவை  : தமிழகத்தில் 18 மாவட்டங்களில் விவசாயிகள் தென்னை விவசாயத்தை காக்க வலியுறுத்தியும், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர், செஞ்சேரி மலை பச்சாபாளையத்திலும் விவசாயிகள், தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும். 

விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். 

ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 8-வது நாள் போராட்டத்தின் போது, விவசாயிகள், கோவை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் வேலு மந்திராச்சலம் தலைமையில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி காய்ச்சி அதனைக் குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe