திருமணமான மூன்றே ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை

published 1 year ago

திருமணமான மூன்றே ஆண்டுகளில்  இளம்பெண் தற்கொலை

கோவை: கோவை அடுத்த பன்னிமடை சரஸ்வதி நகரை சேர்ந்தவர் பூமாதேவி (26). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ள இவர் முல்லை நகரில் உள்ள பசுமை பார்மசியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2020ம் ஆண்டு சூரிய பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணமான ஆறு மாத காலத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பூமாதேவி தனது கணவரை பிரிந்தார்.

இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்த மனவேதனையில் பூமாதேவி இருந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் பூமாதேவி வடவள்ளி கங்கை வீதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கு வீட்டில் ஆட்கள் இல்லாத போது திடீரென தூக்கிகிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த வடவள்ளி போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe