ஆர்.எஸ்.புரத்தில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்..!

published 1 year ago

ஆர்.எஸ்.புரத்தில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்..!


கோவை, ஜூலை 18-

கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் சிலர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகம்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவரிடம் சோதனை செய்த போது அவர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பூச்சி (எ) கிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், நேற்று பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி எதிரே காலி இடத்தில் சந்தேகம்படும் நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ சிவில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் முதலிபாளையம் பட்டக்காடு புதூரை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கல்லூரி மாணவர் வடிவேலை(19) கைது செய்தனர். அவரிடம் இருந்து 195 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe