"பேசிக்கிட்டு இருக்கும் போதே போன் கட் பன்னுவியா..?" தொழிலாளி மீது தாக்குதல்

published 1 year ago

"பேசிக்கிட்டு இருக்கும் போதே போன் கட் பன்னுவியா..?" தொழிலாளி மீது தாக்குதல்

கோவை:  கோவையில் செல்போன் அழைப்பை ஏற்காததால் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சக்திராஜா(40). இவர் கோவையில் தங்கி காந்திபுரம் காளீஸ்வராநகரில் உள்ள ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருடன் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ்(27) என்பவரும் வேலை பார்க்கிறார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், முன்விரோதம் காரணமாக ஆத்திரத்தில் இருந்த சுரேஷ் நேற்று சக்திராஜாவை செல்போனில் அழைத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் சக்திராஜா செல்போன் இணைப்பை துண்டித்தார்.

இதனையடுத்து நிறுவனத்திற்கு வந்த சுரேஷ் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த சக்திராஜாவிடம், ஏன் பேசிக்கொண்டிருக்கும் போது இணைப்பை துண்டிக்கிறாய், மீண்டும் அழைத்தால் செல்போனை எடுக்கமாட்டாயா? என கேட்டு வாக்குவாதம் செய்தார்.

அப்போது வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த சுரேஷ் அங்கிருந்த இரும்பு கம்பியால் சக்திராஜாவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe