பீளமேட்டில் தனியாக நடந்து சென்றவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

published 1 year ago

பீளமேட்டில் தனியாக நடந்து சென்றவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

கோவை: கோவை பீளமேடு விகே ரோட்டை சேர்ந்தவர் ராஜா(21). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று விகே ரோட்டில் உள்ள மின்மயானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் திடீரென ராஜாவை வழிமறித்து பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ராஜாவிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

இது குறித்து ராஜா பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கத்தி முனையில் பணம் பறித்தது பீளமேடு பெரியமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அஸ்வின்(22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe