கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் : ராஜஸ்தான் வாலிபரிடம் விசாரணை

published 1 year ago

கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் : ராஜஸ்தான் வாலிபரிடம் விசாரணை

கோவை : கோவை ஏர்போர்ட்டில் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு ராஜஸ்தான் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாடுகளுக்கும், ஷார்ஜா, துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. இங்கு நேற்று வழக்கம்போல் விமானநிலைய அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது விஷ்டாரா ஏர்லைன்ஸ் பாதுகாப்பு மேற்பார்வையாளர் அருண்குமார்(33), என்பவர் விமான நிலையம் வந்த வாலிபரின் உடைமைகளை சோதனை செய்தார். அப்போது அவரின் பேக்கில் 2 கைத்துப்பாக்கி குண்டுகள் இருந்தது.

அது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு அவர் தனது பேக்கில் துப்பாக்கி குண்டுகள் எப்படி வந்தது என தெரியாது என சொன்னதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒப்பந்த தொழில் செய்து வரும் ஷ்யாம் சிங்(42) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் கைத்துப்பாக்கி உள்ளதா? குண்டுகள் வைத்திருந்ததற்கான நோக்கம் என்ன? அவற்றுக்கு உரிய அனுமதி உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe