சூனியம் வைத்ததாக எழுந்த சந்தேகம்: 2 பேருக்குக் கத்தி குத்து 

published 1 year ago

சூனியம் வைத்ததாக எழுந்த சந்தேகம்: 2 பேருக்குக் கத்தி குத்து 

கோவை :கோவையில் சூனியம் வைத்ததாக எழுந்த சந்தேகத்தில் 2 பேருக்கு கத்தி குத்து விழுந்தது. போலீசார் வாலிபரைக் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் சீனிவாசன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன்(24). இவர் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில், இவரது சகோதரருக்கு போத்தனூர் ராஜேஷ்வரி நகரைச் சேர்ந்த தொழிலாளி ஸ்ரீகாந்த்(20) என்பவர் சூனியம் வைத்து விட்டதாக தமிழரசனுக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீகாந்த் சுந்தராபுரம் கணேசபுரத்தில் உள்ள பள்ளி அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு தமிழரசன், தனது உறவினர் அருண்குமார் என்பவருடன் வந்தார். அப்போது தமிழரசனுக்கும், ஸ்ரீகாந்துக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழரசனை குத்தினார். தடுக்க வந்த அவரது உறவினர் அருண்குமாருக்கும் கத்தி குத்து விழுந்தது. காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe