மனைவியிடம் போனில் உருக்கமாக பேசிவிட்டு கடன் தொல்லையால் தற்கொலை : வங்கி ஊழியர்களுக்கு உறவினர்கள் தர்ம அடி

published 1 year ago

மனைவியிடம் போனில் உருக்கமாக பேசிவிட்டு கடன் தொல்லையால்  தற்கொலை : வங்கி ஊழியர்களுக்கு உறவினர்கள் தர்ம அடி

சென்னை: சென்னையில் உள்ள காசிமேடு, விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன் (வயது 38).

எவர்சில்வர் பட்டறையில் பார்த்து வந்துள்ளார். 2 ரூ.2 வங்கியில் கடன் லட்சம் வாங்கிய ரகுராமன், மாத தவணையாக ரூ.6 ஆயிரம் சில வங்கி வேலை தவணை செலுத்த பாலிஷ் போடும் வேலை செய்து வந்துள்ளார்.

ரகுராமனின் மனைவி சாமுண்டீஸ்வரி. தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் கடன் வாங்குய ரகுராமன் மாத தவணையாக ரூ.6 ஆயிரம் செலுத்தி வந்தார்.

சில மாதங்களாக வருமானம் சரிவர கிடைக்காததால் அவரால் தவணைத் தொகை செலுத்த இயலவில்லை.

இதனால் சம்பந்தப்பட்ட வங்கியின் ஊழியர்கள் 2 பேர் ரகுராமனின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இதில் மனமுடைந்து போன ரகுராமன், வேலைக்கு சென்று அங்கிருந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

அவர், " வங்கி ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். நான் தற்கொலை செய்கிறேன். நீ குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக்கொள்" என தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்து ள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சாமுண்டீஸ்வரி, விரைந்து கணவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்ற  நிலையில் உயிர் பிரிந்த நிலையில் ரகுராமன் சடலமாக தூக்கில் தொங்கினார்.

இந்த தகவல் அறிந்த ரகுராமனின் உறவினர்கள் பெரும் ஆத்திரத்தில்
இருந்த நிலையில், வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணம் தயாராக உள்ளது, வந்து வாங்கி செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

பணம் கிடைக்கப்போகிறது என்று ஆவலாக வந்த அதிகாரிகளை சூழ்ந்துகொண்ட உறவினர்கள்,

வங்கி பணியாளர்களை அடித்து நொறுக்கி காசிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் இரு தரப்பிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe