கருமலை செட்டிபாளையத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

published 1 year ago

கருமலை செட்டிபாளையத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.75க்குட்பட்ட கருமலை செட்டிபாளையம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து,  அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும், தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்துக் கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

உடன் மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் அங்குலட்சுமி, உதவி ஆணையாளர் சேகர், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் எழில், உதவிப் பொறியாளர் நித்யா, மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சலைத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe