கோவையில் வேலை செய்து கொண்டிருந்த  பெயிண்டர் பலி

published 1 year ago

கோவையில் வேலை செய்து கொண்டிருந்த  பெயிண்டர் பலி

கோவை: கோவையில் வேலை செய்து கொண்டிருந்த போது கயிறு அறுந்து கீழே விழுந்த பெயிண்டர் பரிதாபமாகப் பலியானார்.

கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகை பாண்டியன்(45). பெயிண்டர். இவர் நீலிகோணாம்பாளையம் தட்சான் தோட்டத்தில் உள்ள ஒரு பிளாட்டில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். அங்குள்ள கட்டிடத்தில் கயிறு கட்டி அதில் தொங்கியவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாகக் கயிறு அறுந்து கார்த்திகை பாண்டியன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

 இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe