கோவையில் பெண்ணை தாக்கிய டீ மாஸ்டர் கைது

published 1 year ago

கோவையில் பெண்ணை தாக்கிய டீ மாஸ்டர் கைது

கோவை : கோவை கோவைப்புதூரை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி சுதா(47). இவர் கார் லோன் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தீபு என்பவர் வேலை பார்த்து வருகிறார். 

இவர் நேற்று காந்திபுரத்தில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வரும் ராமு(43) என்பவரிடம் லோன் தொடர்பாக செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையறிந்த சுதா நேற்று ராமுவிடம் சென்று இது குறித்துக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமு தகாத வார்த்தைகளால் பேசி சுதாவைத் தாக்கினார். 

இது குறித்து சுதா காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் டீ மாஸ்டர் ராமுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe