கோவையில் குடிநீர் விநியோகம் நாளை தடை

published 1 year ago

கோவையில் குடிநீர் விநியோகம் நாளை தடை

கோவை : கோவை மாநகராட்சி பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் பில்லூர் இரண்டு குடிநீர் திட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு நீரேற்று நிலையம் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாலும், 

மேற்படி வெள்ளியங்காடு நீரேற்று நிலையத்தில் உள்ள கட்டமைப்புகளில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாலும் வரும் 8ம் தேதி காலை 9 மணி முதல் 9ம் தேதி மாலை 6.00 மணி வரையிலும் பில்லூர் இரண்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.  

பொது மக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.   

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe