வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி இன்ஜினியரிடம் ரூ.5.8 லட்சம் மோசடி

published 1 year ago

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி இன்ஜினியரிடம் ரூ.5.8 லட்சம் மோசடி

கோவை : கோவையில் ஆன்லைன் வேலை என கூறி இன்ஜினியரிடம் ரூ.5.68 லட்சம் நூதன மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திரபிரசாத் தெருவை சேர்ந்தவர் சூரியா(26). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து செய்து அவர் தனது விவரங்களை பதிவிட்டார்.

இதனையடுத்து அவர் டெலிகிராம் குழுவில் இணைக்கப்பட்டார். அதன் மூலம் சூரியாவை தொடர்பு கொண்ட நபர், ஆன்லை மூலம் தாங்கள் கொடுக்கும் பணிகளை செய்து கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும், சிறிது முதலீடு செய்தால் போதும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பிய சூரியா, அவர்கள் கொடுக்கும் பணிகளை ஆன்லைனில் செய்து கொடுத்தார். அதற்கு அவருக்கு சிறிய தொகை கமிஷனாக கிடைத்தது. மேலும் அவரை தொடர்பு கொண்ட அந்த நபர் அதிக முதலீடு செய்தால், நிறைய லாபம் கிடைக்கும் என்றார்.

இதை நம்பிய சூரியா அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு கட்டங்களாக ரூ.5.68 லட்சம் அனுப்பினார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு கமிஷன் வரவில்லை. இதன் பிறகு, அந்த நபரை அவர் தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ச் ஆப் செய்து விட்டார். மொத்தமாக ரூ.5 லட்சத்து 68 ஆயிரத்தை சூரியாவிற்கு தராமல் அந்த நபர் மோசடி செய்து விட்டார்.

இது குறித்து சூரியா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe