கோவை ஆனைமலை பகுதியில் கொப்பரை தேங்காய் ஏலம்

published 1 year ago

கோவை ஆனைமலை பகுதியில் கொப்பரை தேங்காய் ஏலம்

கோவை : கோவையில் உள்ள ஆனைமலை பகுதியில் கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் அங்குள்ள விற்பனை கூடத்தில் நடைபெறுவதால், அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். சுமார் 605 மூட்டை கொப்பரையை ஏலம் விட்டனர். இதில் தேங்காய் இரண்டு தரமாக பிரித்து ஏலம் விடப்பட்டது. முதல் முதல் தரமாக 338 மூட்டைகளும், 2-வது தரமாக 267 மூட்டைகளும் என ஏலம் விடப்பட்டது .

கொப்பரையின்  1 - வது தரம் ரூ.70.50 முதல் ரூ.78.78 எனவும், 2 - வது தரம் ரூ.48.39 முதல் ரூ.68.25 வரையும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலத்தில்  காங்கேயம், தாராபுரம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்றன. இந்த வாரம் 112 மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோவிற்கு ரூ.2 வரை விலை குறைந்ததுள்ளது.

 

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe