போதைப் பொருளுக்கு எதிராக முழக்கமிட்ட கோவை மாணவிகள்

published 1 year ago

போதைப் பொருளுக்கு எதிராக முழக்கமிட்ட கோவை மாணவிகள்

கோவை: கோவையில் பள்ளி மாணவிகள் இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

தமிழக அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் கிருஷ்ணம்மாள் மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகர காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் ஒன்றிணைந்து "ஒழிப்போம், ஒழிப்போம் போதைப் பொருளை ஒழிப்போம்" என்று ஒரு சேர முழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, போதைப் பொருளை எந்த விதத்தில் பயன்படுத்தவோ, அதனை மற்றவர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவோ  மாட்டோம் என உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து உதவி ஆணையர் சேகர் மாணவிகள் மத்தியில் பேசுகையில் , 

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை யாராவது பயன்படுத்துவதை அறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை காட்டிக் கொடுப்பதாக நினைக்காமல் அவர்களின் குடும்பத்தை பாதுகாப்பதாக எடுக்கும் செயலாக நினைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணம்மாள் பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் ஜெயா, ஆசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe