கோவை நகை பட்டறை தொழிலாளிடம் செல்போன் பறிப்பு

published 1 year ago

கோவை நகை பட்டறை தொழிலாளிடம் செல்போன் பறிப்பு

கோவை : கோவையில் பைக்கில் சென்ற நகை பட்டறை தொழிலாளியை வழிமறித்து செல்போன் பறித்துச் சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (52). நகை பட்டறை தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பைக்கில் ஐயூடி பி காலணி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நடந்து வந்த வந்த 3 பேர் பைக்கை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து விட்டுத் தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்போன் பறித்த மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe