கோவையில் மின்சாரம் தாக்கி பெண் பலி

published 1 year ago

கோவையில் மின்சாரம் தாக்கி பெண் பலி

கோவை :  கோவை பீளமேடு தண்ணீர்ப் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பாக்கியலட்சுமி (38). பூ வியாபாரி. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 9 ஆண்டுகளாகப் பாக்கியலட்சுமி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று அவர் வீட்டுச் சமையல் அறையில் மின் சுவிட்சை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பாக்கியலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பீளமேடு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe