கோவை வந்தார் ராகுல் காந்தி

published 1 year ago

கோவை வந்தார் ராகுல் காந்தி

கோவை : காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். உச்சநீதிமன்றம் அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால், அவருடைய எம்.பி. பதவி தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் எம்.பி.யாக தேர்வாகிய கேரளாவின் வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார். 

அதற்கு முன் அவர் தமிழகம் வந்து நீலகிரி மாவட்டத்திற்குச் செல்கிறார். இன்று காலை விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி பின்னர், நீலகிரி மாவட்டம் உதகை செல்கிறார். அங்குத் தனியார் விடுதியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவைச் சந்தித்து தேநீர் அருந்துகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை சந்திக்கிறார்.

 அதன்பின் ஹோம் மேட் சாக்லேட் குறித்துக் கேட்டறிகிறார். பின்னர் நீலகிரி செல்லும் வழியில் முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்று, அந்த மக்களிடம் கலந்துரையாடுகிறார். மேலும், அவர்களது கோவிலையும் பார்வையிடுகிறார். அதன்பின் சாலை மார்க்கமாகக் கூடலூர் வழியா வயநாடு செல்கிறார். ராகுல் காந்தியின் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe