வெள்ளலூரில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தி முனையில் வழிப்பறி..!

published 1 year ago

வெள்ளலூரில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தி முனையில் வழிப்பறி..!

கோவை:  கோவையில் வெவ்வேறு இடங்களில் கத்தி முனையில் மிரட்டி டாஸ்மாக் பார் ஊழியர் உட்பட இரண்டு பேரிடம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ஆனந்தபிரபு (43). இவர் நேற்று ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த போன வாலிபர்கள் அவரை வழி மறித்தனர். பின்னர் அவரைக் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த 3,000 பணத்தைப் பறித்துத் தப்பிச் சென்றனர். 

இது குறித்து அந்தோணி ஆனந்த பிரபு ஆர் எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர் அதில் கத்தி முனையில் பணம் பறித்துத் தப்பிச் சென்றது கோவை சாரமேட்டை சேர்ந்த சூப் கடை ஊழியர் ஷாரூக் நவாஸ்(22), மரக்கடையை சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி முகமது மிஷால் (19),  செல்போன் கடை ஊழியர் ரிஷ்வான் (19) என்பது தெரிய வந்தது. போலீசார் மூன்று பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கோவை வெள்ளலூர் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (25). கூலித் தொழிலாளி. 

இவர் நேற்று கடைவீதி பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1300ஐ பறித்துத் தப்பினார். இது குறித்த கணேஷ்குமார் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கணேஷ் குமாரிடம் கத்தி முனையில் பணம் பறித்த கெம்பட்டி காலணியைச் சேர்ந்த சூர்யா (24 ) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கோவை சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு அசோக் நகர் அருகே டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் (34) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்தார் அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மகேந்திரனிடம் மதுபாட்டில் கேட்டு தகராறு செய்தார். 

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தி முனையில் மிரட்டி மகேந்திரனிடம் ரூ. 300ஐ பறித்து தப்பி சென்றார். இது குறித்து மகேந்திரன் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பார் ஊழியரிடம் பணம் பறித்த உக்கடம் முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்த சுபாஷ் என்கிற மாப்பிள்ளை சுபாஷை(23) கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe