வேலாண்டிபாளையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

published 1 year ago

வேலாண்டிபாளையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோவை : கோவை வேலாண்டிபாளையம் சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் பிரசாந்த் 23 இவர் சென்னையில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் பிரசாந்த் வேலைப்பளு காரணமாக மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார் மேலும் அவர் இது குறித்து தனது தந்தையிடம் கூறினார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பிரசாந்த் வேலையை ராஜினாமா செய்து விட்டு கோவைக்கு வந்தார். 

நேற்று வீட்டிலிருந்த இவர் தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் இது குறித்து அவர்கள் சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பிரசாந்தின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe