கோவையில் லாரி மோதி முதியவர் பலி

published 1 year ago

கோவையில் லாரி மோதி முதியவர் பலி

கோவை : கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சியைச் சேர்ந்தவர் சதாசிவம் (73). இவர் நேற்று பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற லாரி சதாசிவம் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe