கோவையில் 80 போதை மாத்திரைகள் பறிமுதல் 2 பேர் கைது

published 1 year ago

கோவையில் 80 போதை மாத்திரைகள் பறிமுதல்  2 பேர் கைது

கோவை:  கோவையில் 80 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பேரைக் கைது செய்தனர். 

கோவை காந்திமா நகர் பகுதியில் சிலர் போதை மாத்திரைகளைப் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சரவணம்பட்டி போலீசார் காந்தி மாநகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்குள்ள தள்ளுவண்டிக் கடை அருகே சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். 

போலீசார் அவர்களிடம் சோதனை செய்த போது அவர்கள் போதை மாத்திரைகளைப் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

 இதனைத் தொடர்ந்து போலீசார் போதை மாத்திரை  விற்பனையில் ஈடுபட்ட பீளமேடு புதூர் மறைமலையடிகள் நகரைச் சேர்ந்த நிதீஷ் குமார் (22), திருச்செங்கோட்டைச் சேர்ந்த பூபதி (26) ஆகிய இருவரைக் கைது செய்தனர். 

பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுடன் தொடர்புடைய கோகுல் என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe