கோவை ரயில் நிலையங்களில் பிரிவினை திகில் நினைவு நாள் அனுசரிப்பு

published 1 year ago

கோவை ரயில் நிலையங்களில் பிரிவினை திகில் நினைவு நாள் அனுசரிப்பு

கோவை : இந்தியா- பாகிஸ்தான் நாடு பிரிக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் வேதனை மற்றும் வலியை வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பிரிவினை திகில் நினைவூட்டல் தொடர்பான புகைப்படக் கண்காட்சி சேலம் ரயில்நிலையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 

ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிவினை பயங்கர நினைவு தினமாக அனுசரிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டுள்ளது. சேலம்  ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புகைப்படக் கண்காட்சியை டாக்டர் எம்.பண்டிக்கனி, உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, மகளிர் அரசு கலைக் கல்லூரி, சேலம்  துவக்கி வைத்தார்.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா ​​முன்னிலையில், சிவலிங்கம், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்,  மற்றும் ஊழியர்கள் பிரிவினை பற்றி விரிவுரை ஆற்றினர்.  ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களிலும் பிரிவினை திகில் நினைவு தினம் தொடர்பான புகைப்படக் கண்காட்சி நடந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe