ஆத்துப்பாலம் போக்குவரத்து நெரிசல் - போலீஸ் கமிஷனர் ஆய்வு

published 1 year ago

ஆத்துப்பாலம் போக்குவரத்து நெரிசல் - போலீஸ் கமிஷனர் ஆய்வு

கோவை : ஆத்துப்பாலத்தில் மேம்பாலப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது குறித்து கோவை மாநகர காவல்துறை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லும் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆத்துப்பாலம் பகுதியில் தரைப்பாலத்தின் குறுக்கே தூண்களின் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாநகர காவல்துறை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆத்துப்பாலம் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது போக்குவரத்து நெரிசல் குறைப்பது குறித்து அங்கிருந்த போக்குவரத்து காவல்துறைக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து போக்குவரத்தைச் சீர் செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்.

ஆத்துப்பாலம் பகுதியில் காவல்துறை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe