கோவையில் மது பாட்டில் விற்ற 9 பேர் கைது

published 1 year ago

கோவையில் மது பாட்டில் விற்ற 9 பேர் கைது

கோவை : சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறைவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாநகரில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து மாநகர மற்றும் மதுவிலக்கு போலீசார் கடைவீதி, போத்தனுார், குனியமுத்துார், பீளமேடு, சரவணம்பட்டி,  உக்கடம், சிங்காநல்லுார், சுந்தராபுரம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். அதில் மது பாட்டில் விற்ற சத்யராஜ், 29, சந்துரு, 65, இளையராஜா, 29, விஜயகுமார், 37, அசோக்குமார், 43, ஜெயபால், 38, ஆறுமுகம், 45, கலை லிங்கம், 39, யாகுப் மீரன், 39, ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 132 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1,320 ஐ பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe