மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலிலை கூடுதல் பெட்டிகளுடன் இயக்க கோரிக்கை

published 1 year ago

மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலிலை கூடுதல் பெட்டிகளுடன் இயக்க கோரிக்கை

கோவை: மேட்டுப்பாளையம் - கோவை இடையே தினமும் மெமு ரயில் இயக்கப்படுகிறது. இதில் சுமார் பத்தாயிரம் பயணிகள் சென்று வருகின்றனர். தற்போது இந்த ரயிலில் 8 பெட்டிகளில் ஒரே நேரத்தில் நான்கு ஆயிரம் பேர் வரை சென்று வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை ‘பீக் ஹவர்’-இல் கூட்ட நெரிசலில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என பலர் மிகுந்த சிரமப்படுகின்றனர். 

கூட்ட நெரிசலை சமாளிக்கும் பொருட்டு இந்த ரயில் பாதையில் கூடுதல் டிரிப்புகள் இயக்கப்பட வேண்டும் அல்லது இப்போது இயக்கப்படும் ரயிலில் அதிகப் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், " மெமு ரயிலில் 8 பெட்டிகளில் 1000  பேர் வரை செல்லலாம், ஆனால் 4000 பேர் வரை செல்லும் நிலை உள்ளது. காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் மெம கூடுதல் பெட்டிகளுடன் இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம் - கோவை இடையே அதிக டிரிப்புகள் இயக்கப்பட வேண்டும்." என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe