கோவையில் தேங்காய் வியாபாரியிடம் ரூ. 10.92 லட்சம் மோசடி

published 1 year ago

கோவையில் தேங்காய் வியாபாரியிடம்  ரூ. 10.92 லட்சம் மோசடி

கோவை : கன்னியாகுமரியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியிடம் தேங்காய் வாங்கி ரூ. 10.92 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதி புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் மகன் விஷால் கிருஷ்ணன்(24). தேங்காய் மொத்த வியாபாரி. இவரைக் கடந்த மாதம் கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டை சேர்ந்த வியாபாரி அன்வர் சதாத்(52) என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது அவர் விஷால் கிருஷ்ணனிடம் தேங்காய் மொத்தமாக அனுப்பி வைக்குமாறும், பணம் உடனே கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தார். 

இதனை நம்பிய விஷால் கிருஷ்ணன் லாரியில் டன் கணக்கில் கோவை காந்திபுரத்திற்குத் தேங்காய் அனுப்பி வைத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட அன்வர் சதாத் முதற்கட்டமாக ரூ. 3 லட்சத்தை விஷால் கிருஷ்ணனிடம் கொடுத்தார். மீதமுள்ள தொகைக்கு ரூ, 10,26,846 மற்றும் ரூ.1,40,076க்கு 2 காசோலைகளையும் கொடுத்தார். ஆனால் அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த விஷால் கிருஷ்ணன் அன்வர் சதத்தைத் தொடர்பு கொண்டு கேட்டார். அதன்பின்பு பல்வேறு தவணைகளாக ரூ. 74 ஆயிரத்தை விஷால் கிருஷ்ணனின் வங்கிக் கணக்கிற்கு அன்வர் சதாத் அனுப்பினார். 

மீதம் கொடுக்க வேண்டிய 10,92,923 ரூபாயைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இது குறித்து பலமுறை கேட்டபோதும் அன்வர் சதாத் பல்வேறு காரணங்களைக் கூறி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தேங்காய் மொத்த வியாபாரி விஷால் கிருஷ்ணன் இது குறித்து கோவை ரத்தினபுரி காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறை நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காந்திபுரம் 100 அடி ரோடு ராஜு நாயுடு தெருவைச் சேர்ந்த அன்வர் சதாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe