வடவள்ளி, துடியலூர் காவல் நிலையங்கள் கோவை மாநகரில் இணைகின்றன..

published 1 year ago

வடவள்ளி, துடியலூர் காவல் நிலையங்கள் கோவை மாநகரில் இணைகின்றன..

கோவை: வடவள்ளி துடியலூர் காவல் நிலையங்கள் கோவை மாநகர ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைய உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகரில், மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்டு காட்டூர், சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சிங்காநல்லூர் மற்றும் போத்தனூர் உட்பட 18 காவல் நிலையங்களும், நான்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் செயலபட்டு வருகின்றன.

வடவள்ளி மற்றும் துடியலூர் காவல் நிலையங்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கீழ் செயல்பட்டு வந்தன.

இதனிடையே இந்த இரண்டு காவல் நிலையங்களையும் மாவட்ட கண்காணிபாளரின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி, மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் கோவை மாநகர காவல்துறையில் வரும் 23ம் தேதி முதல் இணைய உள்ளன.

இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளி மற்றும் துடியலுார் ஆகிய இரு காவல் நிலையங்களும்  தமிழக முதல்வர்  அறிவித்ததின்படி கோவை மாநகர காவல் ஆணையகரத்துடன் இணைக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை எண். 435/உள்துறை (காவல்-XIV) நாள் 16.08.2023 வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாணையில் கண்டுள்ளவாறு வடவள்ளி மற்றும் துடியலுார் ஆகிய இரு காவல் நிலையங்களும், நிர்வாகரீதியாக வருகின்ற 23.08.2023ம் தேதி புதன் கிழமை அன்று கோவை மாநகர காவல் ஆணையகரத்துடன் இணைக்கப்பட உள்ளது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe