கோவையில் இன்றும் நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் இன்றும் நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில்  இன்றும் நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் இன்று (ஆக 21ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது.

பகுதிகள்

மலுமிச்சம்பட்டி ஒருபகுதி, ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் ஒருபகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரீமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.

தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.

நாளை கணியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

பகுதிகள்


ராசி பாளையம், அருகம்பாளையம், சீபா நகர், சுப்பராயன் பாளையம், கணியூர், கொள்ளு பாளையம் ஊத்துப்பாளையம், தென்னம்பாளையம் (ஒரு பகுதி)

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe