கோவையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் - 2 பேர் கைது

published 1 year ago

கோவையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் -  2 பேர் கைது

கோவை : கோவையில் கடந்த சில நாட்களாக விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை மீட்டு புரோக்கர்களை கைது செய்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோவை சரவணம்பட்டி சின்னமேட்டுப்பாளையம் ஓம்சக்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அங்குச் சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கிருந்த இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் விபசார புரோக்கர்கள் நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த சரவணன்(23), திருச்செங்கோடு வெப்படையை சேர்ந்த நவீன்(19) ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe