ராமநாதபுரம் பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி வாலிபர் பலி .

published 1 year ago

ராமநாதபுரம் பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி வாலிபர் பலி .

கோவை : கோவை நஞ்சுண்டாபுரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன் மகன் ஹரிஹரன்(27). இவர் கடந்த 18ம் தேதி இரவு திருச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி ராமநாதபுரம் பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் பயங்கரமாக மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாகக் கோவை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe