கோவையில் பெண்ணிடம் ரூ. 15.22 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை

published 1 year ago

கோவையில் பெண்ணிடம் ரூ. 15.22 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை

கோவை : கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். இவருக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமான நபர் ஒருவர் தனது பெயர் கிளிண்டன் எனவும், தான் லண்டனில் பிரபல கார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றுவதாக அறிமுகப்படுத்தி கொண்டார். 

பின்னர் அவர்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு வாட்ஸ் அப் மூலமாக பேசி வந்தனர். இதனைத்தொடந்து கிளிண்டன் தான் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காகத் தமிழ்நாடு வரவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் நான் உங்களுக்கு பார்சலில் பல லட்சம் பெறுமானம் உள்ள தங்க நகைகளை அனுப்பி வைப்பதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து, அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ஒருவர் தாங்கள் டெல்லி விமானநிலையத்திலிருந்து பேசுவதாகவும், உங்களுக்கு லண்டனில் இருந்து கிளிண்டன் என்பவர் தங்க நகைகளை பார்சலில் அனுப்பி உள்ளார். அதற்கு வரி, விமான செலவு உட்பட சட்ட வழிமுறைகளுக்கு ரூ. 32 ஆயிரம் பணம் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். பின்னர் தொடர்பு கொண்ட அதே நபர் பல்வேறு காரணங்களை கூறி தங்க நகைகளைக் கோவைக்கு அனுப்பி வைக்க வேண்டுமானால் மேலும் பணம் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார். 

இதனை உண்மை என நம்பிய அந்த பெண் பல்வேறு கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ. 15.22 லட்சம் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த நபர் சொன்னபடி தங்க நகைகள் பார்சலில் வரவில்லை, மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. விமான நிலைய அதிகாரி எனவும், தங்க நகைகள் பார்சலில் வந்துள்ளதாகக் கூறி மொத்தமாக ரூ. 15.22 லட்சத்தை மோசடி செய்து விட்டனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe